Sunday, February 16, 2014

Dengue, Swine flu prayer cure Thiru Gnanasambandhar's Neelakanta pathigam

டெங்கு காய்ச்சல் குணமடைய, திருநீலகண்டப் பதிகம் ஓத வேண்டும்


திருஞானசம்பந்தர் தலம்: திருச்செங்கோடு


மற்று இணை இல்லா மலை திரண்டு
அன்ன திண்தோள் உடையீர்!
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது
ஒழிவதும் தன்மை கொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து,
உம்திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

மறக்கும் மனத்தினை மாற்றி, எம்
ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான், திருந்து
அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்,
பறித்த மலர்கொடு வந்து, உமை
ஏத்தும் பணி அடியோம்;
சிறப்பு இலித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

கருவைக் கழித்திட்டு, வாழ்க்கை
கடிந்து, உம்கழல் அடிக்கே,
கருகி மலர்கொடு வந்து உமை
ஏத்ததும்; நாம் அடியோம்;
செருவில் அரக்கனைச் சீரில்
அடர்த்து அருள்செய்தவரே,
திருஇலித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

நாற்றமலர் மிசை நான்முகன்
நாரணன் வாது செய்து,
தோற்றம் உடைய அடியும் முடியும்
தொடர்வு அரியீர்;
தோற்றினும் தோற்றும்; தொழுது
வணங்குதும்; நாம் அடியோம்
சீற்றம் அது ஆம் வினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

சாக்கியப் பட்டும் சமண் உரு
ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப்
போகமும் பற்றும் விட்டார்;
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்
அடி போற்றுகின்றோம்;
தீக்குழித் தீவினை தீண்டப்
பெறா; திருநீலகண்டம்

பிறந்த பிறவியில் பேணி எம்
செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில்
இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ்
பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்
கோனொடும் கூடுவரேதிருச்சிற்றம்பலம்.

*****

Thanks a ton to Smt Saraswathi Thyagarajan.

1 comment:

  1. Great Slokas. Thanks a lot to Smt. Saraswathi Thyagarajan and Sri. Suresh. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

    ReplyDelete